Lyrics
ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல
உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
உடனடியா ஓடிவந்தேன்
ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
ஏற்றுக்கொள்ளுமய்யா
சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
சேர்த்துக்கொள்ளுமய்யா
1. தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே
சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே
கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே
2. பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
பரமனே உன்னை தேடிவந்தேனே
பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன்
ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன்
Details
- Numeric ID
- 3665
- Song ID
- aadharavaa-yaarumillai-lyrics-song-chords-ppt
- Views
- 12
- Downloads
- 3
- Source
- Open