Aadhi Paraaparanin ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக்
ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக்
Lyrics
ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக்
காகவே இத்தனை பாடுகள் பட்டீரோ யேசுநாதா தீதணுகாத பராபரன் சேய் அல்லோ யேசுநாதா நீர் செய்த குற்றம் அணுவாகிலும் தான் உண்டோ யேசுநாதா பாதகன் நான் அல்லோ
கட்டுண்ண வேண்டிய தேசுநாதா சற்றும்
பாவம் இல்லாத நீர் கட்டுண்ணப் பட்டதேன் யேசுநாதா வாதை எனக்கு வரத்தகும் அல்லவோ யேசுநாதா சற்றும்
மாசணுகாத நீர் வாதைக்குள் ஆனீரோ யேசுநாதா
மத்யஸ்தனாய் எனக்காக வந்தீர் அல்லோ யேசுநாதா இந்த
வஞ்சகன் சொந்தப் பிணையாளி நீர் அல்லோ யேசுநாதா
எத்தனை பாதகம் செய்தவனாகிலும் யேசுநாதா எனை
ரட்சிப்பதுன் கடன் அல்லாமல் ஆர் கடன் யேசுநாதா
சத்துரு நான் என் றறிந்தும் இருந்தீரே யேசுநாதா கெட்ட
சண்டாளன் சிந்தையை முற்றும் அறிவீரே யேசுநாதா
சித்தம் இரங்கி எனை முகம் பார்க்கவே யேசுநாதா என்னைத்
தேடி வலிய வரத் தயவானீரோ யேசுநாதா
பத்தம் இல்லாததுரோகி நான் அல்லவோ யேசுநாதா உமைப்
பாடுபடுத்தின பாதகன் நான் அல்லோ யேசுநாதா
பெத்தரிக்கமான பெருமையினாலே நான் யேசுநாதா கெட்ட
பேயைச் சிநேகித்து இக்கோலம் ஆகினேன் யேசுநாதா
புத்தி யில்லா மிருகம்போல் ஆயினேன் யேசுநாதா மனம்
போன வழியெல்லாம் போய் அலைந்தேங்கினேன் யேசுநாதா
சித்தம் வைத்தென் பேரில் திருக்கடைக் கண்ணோக்கி யேசு நாதா உன்தன்
சீர்பதம் சாஸ்வதம் சேவை புரியச்செய் யேசுநாதா
Details
- Numeric ID
- 7093
- Song ID
- aadhi-paraaparanin-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0