Lyrics
ஆகாயம் பனிதூவ
மாமன்னன் உலகினில் பிறந்தார்
கார்கால குளிரினிலே
மாமரி பாலன் பிறந்தார்
இருளை போக்கும் ஒளியாய்
அருளை தந்திட பிறந்தார்
ஏழையின் கோலம் எடுத்து
மாடடை குடில்தனில் பிறந்தார்
1. விண்ணோர் மகிழ்து பாட
மண்ணோர் எழுந்து ஆட
மேய்ப்பர் புடை சூழ
தேவ மகன் பிறந்தார்
இம்மனுவேலனே என் ஏசு பாலனே
உம் பாதம் சரணடைந்தேன்
என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
2. வானில் வெள்ளி தோன்ற
கண்டார் ஞானி மூவர்
பொன்னும் பொருளும் தந்தே
பணிந்தார் உள்ளம் மகிழ்ந்தே
இம்மனுவேலனே என் ஏசு பாலனே
உம் பாதம் சரணடைந்தேன்
என் வாழ்வில் ஒளி ஏற்ற வா
Details
- Numeric ID
- 3202
- Song ID
- aagayam-panithoova-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1