Lyrics
ஆலய மணிகள் ஒலிக்கின்றதே
வாருங்கள் இறைமக்களே
அருள்மழை இங்கு பொழிகின்றதே
வாருங்கள் இறைமக்களே
இது இறைவனின் ஆலயம்
இங்கு அமைதியை காணலாம்
நம்மை காக்கும் இறைவன் வாழும்
இறைவார்த்தை வழியாக
ஏசுவே பேசுகின்றார்
இறைவிருப்பம் எதுவென்று
தெளிவாய் காட்டுகின்றார்
உயிர் தரும் உணவின் வடிவினிலே
உயிர் தரும் உணவின் வடிவினிலே
தன்னையே தருகின்றார்
பலிதரும் உணர்வின் வழியினிலே
வாழ்ந்திட அழைக்கின்றார்
உடலும் மனமும் இறையில் கலந்திட
சபைநடுவே அவர் பிரசன்னம்
என்றும் நிலைத்திருக்கும்
சிறுமந்தையே கலங்காதே
அவர் துணை நமக்கிருக்கும்
இருளும் புயலும் சூழ்ந்தாலும்
கலங்கிட தேவையில்லை
ஒளியாய் துணை தந்து உதவிடவே
அவரின்றி யாருமில்லை
உறவில் மகிழ்ந்து பலியில் இணைந்திட
Details
- Numeric ID
- 4621
- Song ID
- aalaya-manigal-olikkintrathe-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0