Lyrics
ஆளில்லை ஆளில்லை
ஆழுது ஜெபிக்க ஆளில்லை
செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்
கண்ணீர் சிந்த ஆளில்லை
சின்னஞ்சிறுவரை சித்ரவதை செய்து
வதைக்கும் கூட்டம் உண்டு
கதறித் துடிக்கும் பாலகர்க்காக
கண்ணீர் வடிக்க ஆளில்லை
குடித்து வெறித்து அடித்து உதைக்கும்
கொடூரக் கூட்டம் உண்டு
அழுதே வாழ்வை கழிப்போர்க்காக
அழுது புலம்ப ஆளில்லை
தேவன் வருவார் கணக்கு கேட்பார்
எப்படி ஜெபித்தாய் என்பார்
என்ன சொல்ல எப்படி சொல்ல
தலை குனிவோர் ஏராளம்
Details
- Numeric ID
- 4558
- Song ID
- aalillai-aalillai-aludhu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0