Lyrics
ஆனந்தமே ஆனந்தமே
ஆண்டவர் சமூகம் பேரின்பம்
அன்பின் பிதா வீட்டில் ஆறுதலே
என்று சேர்ந்திடுவேன் இயேசுவிடம்
என் இளைப்பாறுதல் பெற்றிடுவேன்
பூவில் பரதேசியாய் ஜீவிப்பேன்
பாரில் அந்நியனாக நடப்பேன்
என் சுயதேசம் சேரும் வரை
என் யாத்திரை சிலுவை பாதையாகும்
இந்தப் புவி எந்தன் சொந்தமில்லை
இங்கே என் மனமோ தங்கவில்லை
என் எண்ணமெல்லாம் மேலோகமே
எப்போது அழைப்பு வந்திடுமோ
பூலோக கூடாரம் அழிந்திடுமே
பாரம் சுமந்து தவிக்கின்றேனே
கைவேலையல்லா நித்ய வீடே
கண்டு களிப்பேன் விண் மாளிகையே
ஜென்ம சரீரம் இம் மண்ணடியில்
சீக்கிரம் அழுகி மறைந்திடும்
ஆவிக்குரிய தேகத்தோடே
ஆவியில் தூதன்போல் மாறிடுவேன்
புது எருசலேம் அலங்காரமே
பன்னிரெண்டு கற்கள் ஜொலிக்குமே
பொற்தள வீதி மின்னிடுமே
பளிங்கு நதியும் பாய்ந்திடுமே
நீதியின் சூரியன் தோன்றிடுவார்
நித்திய ஜீவனும் நல்கிடுவார்
நீடூழி அங்கே வாழ்ந்திடவே
நித்திய வீட்டிற்குச் செல்லுகிறேன்
Details
- Numeric ID
- 4539
- Song ID
- aanadhamae-aanandhamae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0