Aananda Magizhchi Appa ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
Lyrics
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
குற்றம் சுமராது
காத்திடுவார் உயர்த்திடுவார்
காத்து நடத்திடுவார்
தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்
சிநேகிதனும் நீ தான்
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார்
கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்து விடு உன்
காய்ந்த தரையில் நடந்து போவாய்
எதிரி காணமாட்டாய்
உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்
கோணல்கள் நேராகும்
வெண்கல இரும்பு கதவுகள் உடையும்
புதையல் உனதாகும் இந்த தேசம் உனதாகும்
அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர்
என்று நீ அறிக்கையிடு
மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும்
என்று தினம் கூறு
Details
- Numeric ID
- 6571
- Song ID
- aananda-magizhchi-appa
- Views
- 0
- Downloads
- 0