Lyrics
ஆனிலையில் புல்லணையில் அவதரித்த சீலனே
அரையில் நீதி ஆடையணி அருமை மரியாள் பாலனே
இரட்சிப்பென்னும் பாகையணிந்த நிமல சேனைக் கர்த்தனே
நிச்சய வைராக்ய சால்வை நித்யமணி சித்தனே
ஆயர்களால் அளித்த வெண்ணை தயிர் பாலுண்ட ஆயனே
அன்பர்களை காக்கும் எங்கள் அரிய தேவ சேயனே
தன் மகிமையை மறந்து தன் குலத்தில் ஏழையாய்
தானுதித்து சத்தியத்தின் சாட்சியாக வாழியே
Details
- Numeric ID
- 4665
- Song ID
- aanilayil-pullanayil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0