Lyrics
ஆராதனை நாயகனே
உம்மை ஆராதிக்க வந்து நிற்கிறோம்
ஆராதனைக்குரியவரே உம்மை
ஆராதிக்க வந்து நிற்கிறோம்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன்
தேவைகள் எனக்கு முன்பாக
மதிலாக நின்றாலும்
என் தேவையே நீர் தானையா
மனிதர்கள் எனக்கு எதிராக
ஒருமனமாய் வந்தாலும்
என் அடைக்கலம் நீர் தானையா
உயிர் உள்ள நாளெல்லாம் உம்மை நம்பிடுவேன்
என் ஆயுள் முடியும் வரை அண்டிக்கொள்வேன்
நம்பின மனிதர் எல்லாரும்
என்னை மறந்து போனாலும்
என் நம்பிக்கை நீர் தானையா
பெலவீன நேரத்தில் பெலன் இழந்து போனாலும்
என் மருத்துவர் நீர் தானையா
உம் கரத்தை பிடித்து
நான் தினமும் நடந்திடுவேன்
நீர் சொன்னால் போதும்
கடல் மீதும் நடந்திடுவேன்
Details
- Numeric ID
- 576
- Song ID
- aarathanai-nayaganey-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1