Aarinidathil Yeaguvom ஆரிடத்தில் ஏகுவோம்? எம் ஆண்டவனே,

எம் ஆண்டவனே,

Lyrics

ஆரிடத்தில் ஏகுவோம் எம் ஆண்டவனே, ஆரிடத்தில் ஏகுவோம் ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. 1. பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது தாவரமில்லை; நீரே ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். 2. போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து போவதில்லை, பரமனே, ஞானோபதேச குருவான உம்மை அண்டின ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. 3. உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல் உள்ள பொருளனைத்தையும் முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள் தெற்றாய், இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து. 4. பொன் னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த புண்ய நாதன் நீரல்லவோ? பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5274
Song ID
aarinidathil-yeaguvom-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1