Lyrics
ஆறுதலைத் தாருமே தேவா
பாவி எந்தன் சோகங்களும் தீர
உம் காயம்பட்ட திருக்கரங்களாலே
தொட்டாலே போதும் என் ஜீவன் மாறும்
1. எலியாவின் எண்ணங்களை
நிறைவேற்றினீரே-மாராவின்
தண்ணீரையும் மதுரமாக்கினீரே
அன்னாளின் துயரங்களை மறைத்தீர்
நீரே ஆகாரின் கண்ணீரையும்
துடைத்தீரே - யோனாவின்
பாதையெல்லாம் உதவினீரே
நோவாவின் பேழைக்கும் கதவானீரே
இம்மானுவேலே எங்களுக்கிரங்கும்
2. ஜெகத்தின் இரட்சகனே ஜெக ஜோதியே
ஜெருசலேம் நாயகரே ஜெயக்கொடியே
விண்ணவரின் சாயல் கொண்ட
விமலன் இயேசுவே-வியத்தகு அன்பை
கொண்ட விண்ணின் வேந்தரே
விந்தை கிறிஸ்துவே ஜெயநாதரே
விடிவெள்ளியே அருள் மேகமே
உம்பாதம் பற்றிடும் பாக்கியமருளும்
Details
- Numeric ID
- 4546
- Song ID
- aarudhalai-thaarumae-deva-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0