Aarum Thunai Illayae ஆரும் துணை இல்லையே எனக்

ஆரும் துணை இல்லையே எனக்

Lyrics

ஆரும் துணை இல்லையே எனக் காதியான் திருப்பாலா உன்தன் ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத் தாளுவாய் யேசுநாதா. சீர் உலாகு பூங்காவில் ஓர் கனி தின்ற பாதகம் மாற்றவே சிலுவை மீதினிலே உயிர்விடும் தேவனே என் சுவாமி. 1.முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா கிருபை கூர்வையே சிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரசியும்; ஐயனே தீயபாவி எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே! 2.தந்தை தாயாரும் மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே சாகும்நாளாதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும் உண்டுமோ? சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு சொந்தமானவர் இல்லையே சுற்றமும் பொருள் அத்தமும் முழபத்தமே என் தெத்தனே! 3.கள்ளனாயினும் வெள்ளனாயினும் பிள்ளை நான் உனக்கல்லவோ? கர்த்தனே வலப்பக்கமேவிய கள்ளனுக் கருள் செய்தையே தள்ளி என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள் அப்பனே தயவாய் ஒரு குரசில் ஏறிய சருவ ஜீவ தயா பரா 4.நன்றி அற்றவனாகிலும் எனைக் கொன்று போடுவதாகுமோ? நட்டமே படும் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடினதில்லையோ? கொன்றவர்க் கருள் செய்யும் என்று பிதாவை நோக்கிய கொற்றவா குற்றம் ஏது செய்தாலும் நீ எனைப் பெற்றவா பொறுத் தாள்வையே 5.பக்தியேதும் இலாது மாய சுகத்தை நாடுய பித்தனாய்ப் பாழிலே என்றன் நாள் எலாங் கெடுத் தேழையாகினேன் என் செய்வேன்? சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ? தஞ்சம் அற்றவன் ஆகினேன் உன் தஞ்சல் கூறும் அனாதியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2712
Song ID
aarum-thunai-illayae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open