Aaseervadha Mazhai ஆசீர்வாத மழை
ஆசீர்வாத மழை
Lyrics
ஆசீர்வாத மழை பொழியும்
காலம் இதுதானே
ஆவியானவர் காற்றாய் வீச
பெருமழை பெய்திடுமே – 2
உன்னதத்திலிருந்து உன்மேல்
ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்துபோன உன்னை
இயேசு உயிர் பெறச் செய்திடுவார் – 2
உங்கள் துக்கம் சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய்
விலகும் நேரமிது – 2
1. முன் மாரியும் பின் மாரியும் சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்- 2
தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார்
உன் கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார் – 2
உங்கள் துக்கம் சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய்
விலகும் நேரமிது – 2
2. வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது
அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது – 2
சொப்பனத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடுவார்
தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார் – 2
உங்கள் துக்கம் சந்தோஷமாய்
மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய்
விலகும் நேரமிது – 2
பெருமழை ஒன்று பெய்யும்
நம் தேசத்தின் மீது பெய்யும் – 2
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார் – 2
ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்
Details
- Numeric ID
- 679
- Song ID
- aaseervadha-mazhai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1