Lyrics
ஆதாரம் நீயே அருட்கடலே
உந்தன் பாதாரம் தொழுதேன் பரம்பொருளே
சிலுவையில் தொங்கும் சிகப்பு நிலாவே
மறுபடி உதிப்பாயா
கொலுவினில் தூங்கும் அமைதிப் புறாவே
மறுபடி உயிர்ப்பாயா
பிரபஞ்சத்தின் உறக்கங்கள் கலைக்கும் உன்
அடக்கம் பிரசன்னத்தில் துயில் மீண்டு
எடுப்பேன் நான் ஜனனம் பூக்கும்
மணமெல்லாம் உன் காலை வானம்
பார்க்கும் இடமெல்லாம் என் தேவ கானம்
பனித்துளி குடங்கள் பூக்களின் தலையில்
ஒளித்துளி நீ வருக வந்து ஒளி முத்தம் நீ தருக
விழித்துளி விழுந்து வழித்தடம் அழிந்து
மழைத்துளி நீ விழுக விழுந்து அகத்தினில்
கரைந்திடுக கவித்துளி பொழிந்தேன்
கன்னித்தமிழ் புனைந்தேன்.
உயிர்த்துளி நீ எழுக எழுந்து ஜதியினில்
உயிர்த்திடுக ஜதியினில் உயிர்த்திடும்
Details
- Numeric ID
- 4612
- Song ID
- aatharam-neeya-arutkadale-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0