Aathiyam Maha ஆதி யாம் மகா ராசனே எந்த வேளையும்
ஆதி யாம் மகா ராசனே எந்த வேளையும்
Lyrics
ஆதி யாம் மகா ராசனே எந்த வேளையும்
அடிய னோடிரும் ஈசனே
தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசா
பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால்
பாவி பெலனால் ஐயனே நின்றால் என்னைப்
பகைவர் ஜெயிப்பார் மெய்யனே
தேவா துணை நீர் ஐயனே சிறியனிடம்
சேர்ந்தே வசியும் துய்யனே
மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே
சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும்
இரக்கம் பொழிய வாருமே கிருபையாக
இறைவா என்னிடம் சேருமே
உருக்கம் நிறைந்த நீருமே அனவரதம்
உந்தம் அருளைத் தாருமே
செருக்காய் எம்மீ திகலோர் சேதம் செய்ய நினைக்கும்
திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள்புரியும்
Details
- Numeric ID
- 7162
- Song ID
- aathiyam-maha-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0