Lyrics
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே
இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே
பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார்
சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
இயேசு செலுத்திவிட்டாரே
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே
Details
- Numeric ID
- 4660
- Song ID
- aathiyil-vaarthaiyaaga-iruntha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0