Aathiyil Yethenil ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
Lyrics
ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை
அருளிச் செய்தீரே
அவ்விதமாகவே இவ்விருபேரையும்
இணைத் தருள்வீரே
மங்களமாய் திருமறையைத் தொடங்கி
மங்களமாய் முடித்தீர்
மங்கள மா மணவாளனாய் மைந்தனை
மாநிலத்தில் விடுத்தீர்
ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக்
கருள் புரிந்தீரே
அங்ஙனமே இந்த மங்களம் செழிக்க
ஆசியருள்வீரே
கானாவூர் கல்யாணம் கண்டு களித்தஎம்
கர்த்தரே வந்திடுவீர்
காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திடக்
கருணை செய்திடுவீர்
இன்பத்தும் துன்பத்தும் இம்மணமக்கள் தாம்
இசைந்து வாழ்ந்திடவே
அன்பர் உம் பாதமே ஆதாரம் என்றும்மை
அணுகச் செய்திடுவீர்
Details
- Numeric ID
- 7202
- Song ID
- aathiyil-yethenil-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0