Lyrics
ஆத்தும ஆதாயம் செங்குவோமே – இது
ஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால்
ஆசீர்வாதம் பெறுவோம்
சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
தஞ்சத்தைப் பெற்றுநாமித்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
அற்புதமான பலனை அடையலாம்
1.பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் – ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்தி விட்டால்
ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று
ஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே
2.கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவசுதன் – வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தைதானே
துட்டை யருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே
Details
- Numeric ID
- 7740
- Song ID
- aathuma-aadhayam-song
- Views
- 0
- Downloads
- 0