AAYAN NANTHAANAE ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல

ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல

Lyrics

ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல ஆயன் நான் தானே. ஆயன் நான் தானே நேயமிகுத்துச்ச காயம்புரியும் மாதூய பிதாவினோர் சேயனுந் துஷ்ட ஓநாயென்ற பொல்லாத பேயை யழிக்கும் ஐங்காயனுமாகிய சீலகுண இஸ்ராவேலென்ற பத்தனைப் போலமந்தைக் கனுகூலகமாய்த் தன்னண்டை ஞாலத்தினாடுகள் கோலத்துடன் சேரக் காலந் தப்பாதென்றும் வேலைசெய்யும் நல்ல இட்டமுள்ள ஆட்டுக்குட்டிகளைக் கொல்லுந் துட்ட நரிகளைக் கட்டுக்கண்ணிக்குள்ளே பட்டுக் கொள்ளப்பண்ணி திட்டத்துடனின்று வெட்டிப்போடும் மிகக் கெட்டிக்கரமுள்ள அன்புற்ற தாயவள் தன்பெற்ற பிள்ளையை இன்புற்று நோக்கும்போல் துன்புற்ற ஆட்டினை என்பெற்ற பிள்ளையாய் நண்புற்று நோக்கியே பொன் பெற்ற கையினால் நான் பற்றித் தூக்குவேன் ஆட்டுமந்தைக்கூலிக் கேட்டுவன் போலநான் காட்டோனாயைக்கண்டால் ஒட்டம் பிடிப்பேனோ? மாட்டேனே மெய்யாக ஈட்டியினாற்குத்திப் போட்டிடுவேன் அப்போ வேட்டைக்காரன் போலே சாவுறு மாட்டிற்காய் ஓவியமான வென் சீவன்விடக் கொஞ்சமாவ தஞ்சுவேனோ? ஆவலுடனல்லோ ஆவியைப் போக்குவேன் பாவப் பசாசுகள் கூவிச் சாகும்படி காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் சீலந் தப்பாமலும் காலந் தப்பாமலும் நூலென்ற வேதத்தின் பாலென்றுந் தங்கியே வேலைசெய்யும் நல்ல வேலைக்காரருள்ள

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7079
Song ID
aayan-nanthaanae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0