Lyrics
ஆயத்தமானேன் ஆயத்தமானேன்
ஆண்டவர் பணியை செய்திடவே
அவரின் அழைப்பை நானும் கேட்டு
அவர் சித்தம் செய்ய தந்தேன் என்னை
கிறிஸ்துவின் சேனையில்
இருந்து பிரகாசிப்பேன்
கிருபைமேல் கிருபை பெற்று
கிறிஸ்துவுக்காய் வாழுவேன்
1. அழிந்து போகும் ஆத்துமாக்கள்
அவரை அறிந்து மீட்கப்பட
அக்கம் பக்கத்திலுள்ளவரெல்லாம்
அவரின் நாமம் அறிந்துகொள்ள
2. சத்தியத்தின் வல்லமையில்
சாத்தானின் சதியை தகர்த்திடுவேன்
சுகம் தரும் இயேசுவின்
சுவிசேஷம் சொல்லிடுவேன்
3. மகிபனின் நேசமே
மாறிடா நேசமென்று
மானிடர் யாவர்க்கும்
மனதார சொல்லிடுவேன்
Details
- Numeric ID
- 4605
- Song ID
- aayaththamaanean-aayaththamaanean-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0