Lyrics
ஆயுததாரி நான், அபாத்திரனே,
சேனாபதிக்கோ பின் செல்வேனே.
நில், செல் என்றவர் சொல்லக் கேட்கவும்,
யேசுவின் நல்வாக்கை நம்பி வெல்லவும்.
பேரொலி கேட்குதே! ஜெயமுண்டாம்!
போராடுவோம் முனைமுகமெல்லாம்.
சேனாதிபதி என்னை நோக்குவார்;
ஆயுததாரியையும் நம்புவார்.
ஆயுததாரி நான் இந்நேரத்தினில்
சன்னத்தனாகப் படை முகத்தில்,
போர்க்களத்தில் தாரவாரங் கேட்கவே
பயமில்லாமல் யுத்தஞ்செய்வேனே.
ஆயுததாரி நான், அசக்தனுமாய்க்
காணப்பட்டாலும், வெற்றிவேந்தனாய்
நித்திய காலம் மிக வாழுவேன்,
மோட்ச வீட்டில் என்றும் நிலைத்திருப்பேன்.
Details
- Numeric ID
- 2668
- Song ID
- aayuthathaari-naan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0