Ada Somberiye Nee அட சோம்பேறியே நீ

அட சோம்பேறியே நீ

Lyrics

அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய் புத்தியை கத்துக்கோ – 2 தலைவனில்லாதிருந்தும் யாரும் கட்டளையிடாதிருந்தும் தன் காலத்தில் தன் பணியைச் செய்யும் கோடைக்காலத்தில் தன் உணவை சேர்க்கும் எறும்பு இதை கண்டு மனந்திரும்பு – 2 1. படுத்த பாயைக் கூட மடிச்சுப் போடாம பாரு வீட்டுக்குள்ள கெடக்கறான் அடுத்தவன் பாக்கெட்ட அலசி பார்த்துதான் வாழ்க்கையை தினமும் நடத்துறான் – 2 இன்னும் கொஞ்சம் உறங்கட்டும் இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்று கை முடக்கி தூங்குறான் – 2 படைச்ச ஆண்டவருக்கு அவமானத்த கொடுத்து தினமும் தான் வாழுறான் – 2 2. சோம்பேறி வயலு பாம்பேறி புதரு காஞ்சொறி மூடி கெடக்குது இடிஞ்ச மண் சுவரு. ஒடஞ்ச கற்சுவரு பாழாகி போயி கெடக்குது – 2 வீணான தூக்கம் கொண்டு வரும் மயக்கம் வாழ்க்கையை வீணாய் அழிக்குது வறுமை வியாதி தரித்திரம் பசி தான் வாட்டி தினமும் வதைக்குது – 2 3. போதுமென்ற மனதுடன் கூட தேவபக்தியோடு சோர்ந்து போகாமல் உழைக்கணும் சூதுவாது இல்லாத ஆதி தேவன் வார்த்தைக்கு நன்றி சொல்லி தினமும் துதிக்கணும் – 2 கர்த்தரோடே சித்தம் செய்வதே நித்தம் என்பதே வாழ்க்கை ஆகணும் எறும்பு தந்த இந்த பாடத்தை வாழ்வில் கரும்பு கரும்பு என்று கடிக்கணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
198
Song ID
ada-somberiye-nee-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1