Lyrics
அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய்
புத்தியை கத்துக்கோ – 2
தலைவனில்லாதிருந்தும் யாரும்
கட்டளையிடாதிருந்தும்
தன் காலத்தில் தன் பணியைச் செய்யும்
கோடைக்காலத்தில் தன் உணவை சேர்க்கும்
எறும்பு இதை கண்டு மனந்திரும்பு – 2
1. படுத்த பாயைக் கூட மடிச்சுப் போடாம
பாரு வீட்டுக்குள்ள கெடக்கறான்
அடுத்தவன் பாக்கெட்ட அலசி பார்த்துதான்
வாழ்க்கையை தினமும் நடத்துறான் – 2
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்
என்று கை முடக்கி தூங்குறான் – 2
படைச்ச ஆண்டவருக்கு அவமானத்த கொடுத்து
தினமும் தான் வாழுறான் – 2
2. சோம்பேறி வயலு பாம்பேறி புதரு
காஞ்சொறி மூடி கெடக்குது
இடிஞ்ச மண் சுவரு. ஒடஞ்ச கற்சுவரு
பாழாகி போயி கெடக்குது – 2
வீணான தூக்கம் கொண்டு வரும்
மயக்கம் வாழ்க்கையை வீணாய் அழிக்குது
வறுமை வியாதி தரித்திரம் பசி தான்
வாட்டி தினமும் வதைக்குது – 2
3. போதுமென்ற மனதுடன் கூட தேவபக்தியோடு
சோர்ந்து போகாமல் உழைக்கணும்
சூதுவாது இல்லாத ஆதி தேவன் வார்த்தைக்கு
நன்றி சொல்லி தினமும் துதிக்கணும் – 2
கர்த்தரோடே சித்தம் செய்வதே நித்தம்
என்பதே வாழ்க்கை ஆகணும்
எறும்பு தந்த இந்த பாடத்தை வாழ்வில்
கரும்பு கரும்பு என்று கடிக்கணும்
Details
- Numeric ID
- 198
- Song ID
- ada-somberiye-nee-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1