Lyrics
அடிமையாக நாங்கள் இருந்தோமே
ஆராதிக்க எம்மை தெரிந்தெடுத்தீர்
தம் சொந்த ஜனமாக பிரித்தெடுத்தீர்
சுதந்திரவாளியாக மாற்றிவிட்டீர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதித்து ஆராதித்து வெற்றி பெறுவேன்
செங்கடலோ எங்கள் முன்னே
பார்வோன் சேனைகள் எங்கள் பின்னே
என்ன செய்வது ஒன்னும் புரியல
இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம்
தாகம் தீர்க்க தண்ணீர் இல்ல
சுற்றிப்பார்த்தால் வாய்ப்பே இல்ல
கற்பாறை திறந்து தண்ணீர் வந்தது
இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம்
எழும்பி நின்ற எரிகோ கோட்டை
ஏழுதரம் சுற்றினப்பின் விழுந்து போனது
துதியினால் எதையும் மேற்கொள்ளுவோம்
இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம்
Details
- Numeric ID
- 4737
- Song ID
- adimaiyaaga-nangal-irunthoomye-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0