Lyrics
ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
என் இயேசு ராஜனுக்கு எத்தனை நாமங்கள்
ஆயிரமாயிரம் நாவுகளால் அன்பின் தேவன்
அருள்நாதன் புகழ்பாடுவோம்
ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே
வெள்ளி மணி ஓசைகள் ஜதி போடவே
ராகங்கள் தாளங்கள் கைதாளங்கள்
தந்தும்மை தினந்தோறும் நான் பாடுவேன்
பன்னிரெண்டு ஆண்டுகள்
பெரும் பாடுகள் பட்டவளாம்
பற்பல இடங்களில் வைத்தியம்
தேடி அலைந்தவளாம்-மாவேந்தர்
மகிமையின் ஆடையை தொட்டாள்
அந்தக்ஷணமே சுகமடைந்தாள்
குஷ்டரோகி அவனை தொட்டு
கரம்பிடித்தார்- இஷ்டமுடன் அவனை
இயேசு தம்மிடம் சேர்த்து கொண்டார்
பாவங்களை போக்கும் பரிசுத்த தேவன்
பரிவோடு தொட்டு குணமாக்கினார்
எத்தனை அற்புதங்கள் எனக்கும்
செய்தீரே-எண்ணிக்கை அடங்குமோ
எந்நாளும் மறக்க முடியுமோ
இசையோடு உம்மைப்பாட வைத்தவர் நீரே
என்றென்றும் என்னை காப்பவர் நீரே
Details
- Numeric ID
- 4454
- Song ID
- aezhu-svarangkalil-ethanai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0