Lyrics
ஏழு ஸ்வரங்களிலே உம்மையே துதித்திட
பாக்கியம் தந்தாய் தேவனே
ஏழை என் குரலில் உம்மையே பாடிட
அர்ப்பணித்தேனே மன்னனே
பாரினில் நின் புகழ்
கேளா இடமுண்டோ
பாரத தேசமும் பாடிடுமே
நரர்க்காய் ஜீவனை கொடுத்தவரே
கொல்கொதா மலையின் சிலுவையிலே
அறியாமலே செய்கிறார் உரைத்தீரே
பிதாவே மன்னியும் வேண்டினீரே
பொன்னான பாதங்கள்
புண்ணாக நடந்தீரே
எருசலேம் நகரின் வீதியிலே
மண்ணான மாந்தர் விண்
வாழ்வு பெற்றிடவே
மரணத்தை ஜெயித்த வேந்தனையா
Details
- Numeric ID
- 4453
- Song ID
- aezhu-svarangkalil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0