Lyrics
ஐயா அம்மா கேளுங்க
ஆண்டவரைப் பாருங்க
அங்க இங்க உட்காந்து
நான் சொல்லுறதை கேளுங்க
கேளுங்க … கேளுங்க … கேளுங்க
ஆண்டவரின் வார்த்தைகள் கேளுங்க
இந்த கிறிஸ்தவன் இல்லைன்னா
இந்த ஊருக்கு நிம்மதி ஏது
இந்த இயேசு சாமி இல்லைன்னா
இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது
எங்க ஆலயம் இல்லைன்னா
இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது
1. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி
உடைச்சிப் போட்டவன் கிறிஸ்தவன்
தவிச்சவனுக்கு தாகத்துக்கு
தண்ணி கொடுத்தவன் கிறிஸ்தவன்
ஜாதியை ஒழிச்சவன் கிறிஸ்தவன்
ஜனங்கள நேசித்தவன் கிறிஸ்தவன்
– இந்த
2. அரை துணி கால் துணி
போட்டுத் திரிஞ்ச நம்மள
பேண்ட் சட்டை போட வச்சி
அழகு பார்த்தவன் கிறிஸ்தவன்
படிப்பக் கொடுத்தவன் கிறிஸ்தவன்
பாசத்தைக் காட்டினவன் கிறிஸ்தவன்
– இந்த
3. சண்ட போட மாட்டோம்
வீணா மண்டைய உடைக்க மாட்டோம்
இரத்தஞ்சிந்த மாட்டோம்
வீண் வம்புக்கு போக மாட்டோம்
முழங்கால் போடுபவன் கிறிஸ்தவன்
எதையும் சாதிப்பவன் கிறிஸ்தவன்
Details
- Numeric ID
- 323
- Song ID
- aiyaa-ammaa-kaelunga-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0