Aiyaayaa Nan Paavi ஐயையா நான் பாவி என்னை
ஐயையா நான் பாவி என்னை
Lyrics
ஐயையா நான் பாவி என்னை
ஆளும் தயாபரனே
1.பொய்யாம் உலக உல்லாசாத்தினால்
மனம் போன வழி நடந்தேன்
ஏசையா அபயம் அபயம் இரங்கும்
மேசையா என் தாதாவே
2.எத்தனை சூதுகள் எத்தனை வாதுகள்
எத்தனை தீதுகளோ
எனது அத்தனே என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும் கோவே
3.வஞ்சகமோ கரவோ கபடோ மாய்
மாலமோ ரண்டகமோ
மனச் சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்
சமஸ்த நன்மைக் கடலே
4.பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும்
பொறாமையும் ஆணவமும்
விட்டுய்யும்படி அருள் செய்யும்
அனாதி ஓர் ஏகதிரித்துவனே
5.உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
துனதடியார்களையும் நான்
என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும் பராபரனே
Details
- Numeric ID
- 7151
- Song ID
- aiyaayaa-nan-paavi-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0