Alaikirar Alaikirar Itho Neeyum Vaa அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
Unknown
Lyrics
Lyrics
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ
பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும்
நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்
துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ
அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ
கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்கக்
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே
சாந்த சொரூபனே ! சத்திய வாசனே !
வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார்
Details
- Numeric ID
- 4805
- Song ID
- alaikirar-alaikirar-itho-neeyum-vaa-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0