Lyrics
அனாதி அன்பால் அழைத்த தேவா
காருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பே
ஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பே
ஆ அல்லேலூயா அல்லேலூயா
ஆ அல்லேலூயா அல்லேலூயா
என் மேல் நீர் வைத்த அன்பு
முந்தி வந்ததல்லவோ
நேசம் மரணத்திலும்
வலியதல்லவோ
ஆகையினாலே உந்தன்
அன்பு என்னை வென்றதே
– அனாதி
வேறெந்த அன்பின் இன்பம்
நிலையற்றதல்லவோ
மேகம் போல் மாறிப்போகும்
தன்மையுள்ளதல்லவோ
ஆகையினாலே உந்தன்
அன்பை நான் நம்புவேன்
– அனாதி
அன்பாகவேயிருக்கும்
அன்பின் தேவனல்லவோ
உந்தனின் வார்த்தைகளை
யாரும் மீறலாகுமோ
ஆகையினாலே நானும்
என்றும் கீழ்படிவேன்
Details
- Numeric ID
- 378
- Song ID
- anaathi-anpaal-alaiththa-thaevaa-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0