Anbe Anbe Anbe Anbe Aaruyirea அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே
Lyrics
அன்பே அன்பே அன்பே அன்பே
ஆருயிரே ஆராரோ
விண்ணை விட்டு மண்ணில் வந்த
விண்மலரே ஆராரோ (2)
கன்னிமரி ஈன்றெடுத்த
பாலகனே ஆராரோ
என் இதய ஏக்கமெல்லாம்
தீர்த்தவரே ஆராரோ (2)
1. ஏசாயா எழுதி வைத்தார்
மீகாவும் சூழுரைத்தார்
தீர்க்கர்கள் முன்னுரைத்த
வார்த்தையாய் வந்து தீர்த்தார் (2)
பரலோக தந்தையரின்
தேவசுதான் என்றுரைத்தார் (2)
2. நீ பிறந்த அந்நாளில்
நானும்கூட அங்கிருந்தால்
என்ன சொல்லி பாடிருப்பேன்
என்னுயிரின் நாயகனே (2)
சங்கீதத்தின் ஸ்வரங்களால்
புகழ்சாரம் சூடிருப்பேன் (2)
3. தங்கமணி மாளிகையில்
நீ பிறக்க வில்லை அய்யா
மாட்டு குடில் முன்னணையில்
மன்னவரே வந்தீரய்யா (2)
கன்னிமரி மடித்தானில்
உள்ளணையை கண்டீரய்யா (2)
Details
- Numeric ID
- 3169
- Song ID
- anbe-anbe-anbe-anbe-aaruyirea-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1