Lyrics
அன்பின் தேவன் ஆண்டவர்
அடைக்கலம் நமதாண்டவர்
கண்மணிபோல் என்னை நடத்தி
கடைசி வரையில் காப்பவர்
1. துன்பங்கள் சூழும் வேளையில்
துணையாய் நின்று காத்திடுவார்
துயரம் யாவும் போக்கி என்னை
தூய வழியில் நடத்துவார்
2. கவலை கஷ்டங்கள் வந்தாலும்
இனி நான் கலங்கத் தேவையில்லை
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
யாவையும் நன்மையாய் மாற்றிடுவார்
3.அன்பின் தேவனை நினைக்கையிலே
ஆசைகள் யாவும் மறையுதம்மா
அன்பரின் அன்பை நினைக்கையிலே
ஆத்தும பாரம் தோன்றுதம்மா
Details
- Numeric ID
- 4685
- Song ID
- anbin-devan-aandavar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0