Lyrics
அன்பு நிறைந்த தெய்வம் நீரே
இரக்கத்தில் ஐஸ்வர்யம் நீரே
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
தகுதி இல்ல அடிமை என்னை
உயர்ந்தவர் உன்னதர் நீரே
ஆனாலும் என்னை நேசித்தீர்
என்னிலே ஒன்றும் இல்லை
என்னிலே நன்மை இல்லை
ஆனாலும் என்னை உயர்த்தினீர்
வாழ்நாளெல்லாம் உம் புகழை
என்றென்றும் பாடிடுவேன்
உந்தன் நாமம் எந்தன் மேன்மை
என்றென்றும் உயர்த்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ …
1.உன்னதமானவரின்
மறைவிலே வாழ்கின்றேன்
சமாதான தாபரமும் நீரே
உம் நாமம் அறிந்ததினாலே
உயரத்தில் வைத்தீரையா
என்றென்றும் நீரே அடைக்கலம்
அரணான கோட்டை நீரே
நான் நம்பும் கேடகமே
என்றென்றும் உம்மை உயர்த்துவேன்
2.இடுக்கமென்னும் சமுத்திரத்தை
எனக்காக வழிதிறப்பீர்
மகா பெரிய தேவன் நீரே
சமுத்திர அலைகளை எல்லாம்
வல்லமையால் அடிப்பீரையா
ஆழங்கள் வற்றி போகுமே
சர்ப்பத்தின் தலைகளை எல்லாம்
முற்றிலும் உடைப்பீரையா
தடையின்றி கடந்து சென்றிடுவேன்
Details
- Numeric ID
- 5363
- Song ID
- anbu-niraintha-dhaivam-neerae-song-lyrics
- Views
- 1
- Downloads
- 1