Lyrics
அன்னை தந்தையை போல் என்னிடம்
அன்பாய் பேசிட யாருமில்லை
மண்ணிலே பிறந்த எவரும்
தன்னையே எண்ணி வாழுகின்றனர்
என்னை போல் அன்புக்காய் ஏங்கிடும்
ஏழையை நினைக்க யாருண்டு
கண் இமைகள் நான் மூடி விட்டால்
செல்வேன் எங்கென்றும் தெரியவில்லை
1. அன்னை தந்தைக்கு மேல் உன்னிடம்
கொஞ்சி பேசிட யேசுண்டு
மண்ணிலே பிறந்த அவரே
உன்னையே எண்ணி வாழ வந்தார்
அன்பின் தேவன் உன்னை இரட்சிக்க
சிலுவையில் ரத்தம் சிந்தினார்
கண் இமைகள் நீ மூடும் வேலை
கண்மணி உன்னை மோட்சம் சேர்ப்பார்
2. அன்னையும் தந்தையும் இயேசுவே
அண்ணனும் மன்னனும் இயேசுவே
அன்பரும் நண்பரும் இயேசுவே
அனைத்தும் எனக்கு இயேசுவே
எந்தன் இன்பமெல்லாம் இயேசுவே
எந்தன் எண்ணமெல்லாம் இயேசுவே
எந்தன் வாழ்க்கையெல்லாம் இயேசுவே
என் எல்லாம் உமக்கே இயேசுவே
Details
- Numeric ID
- 4759
- Song ID
- annai-thanthaiyai-pol-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0