Lyrics
அன்பால் என்னை நேசித்தீரே
அன்பால் என்னை அரவணைத்தீரே
தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்
தகப்பனைப் போல சுமந்தீரே
துரோகம் செய்த வேளையிலும்
கிருபையால் என்னை ஏற்றுக்கொண்டீர்
ஆராதனை இயேசுவே
ஆராதனை என் தெய்வமே
பரலோக மகிமையை துறந்து வந்தீர்
பாவியாம் என்னை நீர் மீட்டெடுத்தீர்
மனுக்குலம் மீட்ட இம்மானுவேலே
மகிமையின் வாழ்க்கையை எனக்களித்தீர்
வனாந்தர வேதனை நீர் அறிந்தீர்
அழுகுரல் கேட்ட ஏல்ரோயீ
காண்கின்ற தேவன் என் தேவன்
காலமெல்லாம் என்னைக் காத்தீரே
ஏல்ரோயீ நீர் தானே
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
ஆராதனை இயேசுவே
ஆராதனை என் தெய்வமே
Details
- Numeric ID
- 4678
- Song ID
- anpaal-ennai-nesitheer-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0