Antho Kalvariyil Arumai அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
Lyrics
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்கினார்
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாயலோகத்தோ டழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே
அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே
அதிசயம் இது இயேசுவின் நாமம்
அதினும் இன்பம் அன்பரின் தியானம்
அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே
சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்
Details
- Numeric ID
- 6982
- Song ID
- antho-kalvariyil-arumai
- Views
- 1
- Downloads
- 1