Appa Arutkadale Varam அப்பா அருட்கடலே வரம்

அப்பா அருட்கடலே வரம்

Lyrics

அப்பா அருட்கடலே வரம் துப்பாய் இவர்க்கருள்வாய் செப்பரிதாகிய மெய்ப் பொருளை எங்கும் சென்றறிவித்திட நிறைவாய் பண்டு புறாவுருகொண்டு இறங்கிய பான்மை இவர் சிரமீதே -திருத் தொண்டு செய்யும்படி வல்லாவியால் முடி சூட்ட இரங்கும் இப்போதே நன்னயமாகவே பன்னிரு வேதியர் நாவில் எழுந்துரை யாடிப் -பேயின் சன்னதம் ஓய்ந்திடப் பண்ணியவாறிவர் தம்மிலும் வந்தசை வாடி இன்பாய் உலகை இமைக்குள் அமைத்தவர் ஏவைக் குலங்கள் ஈடேறப்-பெருந்த துன்பாய் இறந்த பேரன்பைத் தெளிவுறச் சொல்லு முந்நூலினில் தேற தேகமும் ஆவியும் ஜீவியம் யாவையும் தீயவை அப்புறம் ஏகத்-திரி யேகருக் கர்ப்பிதமாக ஒப்பிக்கும் நல் எண்ணம் இவர்க்குள் உண்டாக. முந்து நடுவு முடிவுமிலா ஒரு மூவரில் அக்கினிக் கொழுந்தே-தேவ சிந்தை இவரில் சிறந்தொளி வீசிடச் செய்வதற் கிங்ங்னம் எழுந்தே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7738
Song ID
appa-arutkadale-varam-song
Views
0
Downloads
0