Appa Thayala Gunanandha Song அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா

அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா

Lyrics

அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ ஏசுநாதா குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ கன்னம் அதைத்ததோ கண்கள் சிவந்தவோ சுவாமீ -பொறி மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ நன் னேமி மெய்யான சாட்சி இட்டையனே சொன்ன உம் மீதே – தீயர் பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே என் கட்டைநீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ – உம்மைப் பின் கட்டாய்க் கட்டி பிலாத்திடங்கொண்டு போனாரோ இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே – என்றன் கர்த்தனே உன் மீதில் வந்ததையோ தேவ கோபமே நீர்பட்ட பாட்டைப்போல் ஆர் பட்டுத்தாங்குவார் தேவே – பல கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே கோவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1278
Song ID
appa-thayala-gunanandha
Views
11
Downloads
2
Source
Open