Lyrics
அறிவுக்கு எட்டாத காரியம் செய்யும்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஜீவனுள்ள தேவனை ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம்
செங்கடல் இரண்டாக பிளந்ததுவும்
தேவ ஜனம் அதிலே நடந்ததுவும்
ஜலமே மதிலாய் நின்றதுவும்
அறிவுக்கு எட்டாத காரியமே
யோர்தான் இரண்டாக பிரிந்ததுவும்
துதியினால் எரிகோ தகர்ந்ததுவும்
கன்மலை தண்ணீரைத் தந்ததுவும் ஊ
அறிவுக்கு எட்டாத காரியமே
பரலோக தேவன் பூமியிலே
கன்னியின் மகனாய் பிறந்ததுவும்
மரித்து மூன்றாம் நாள் உயிர்த்ததுவும்
அறிவுக்கு எட்டாத காரியமே
Details
- Numeric ID
- 4588
- Song ID
- arivukku-etaadha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0