Lyrics
அர்ப்பணித்தேன் உந்தன் பாதத்தில்
தருகிறேன் தூய பலியாக
என் ஆத்துமா உம்மை பற்றிக் கொள்ளும்
வறண்ட நிலம் போல் காத்திருக்கும்
உதவிடும் கன்மலை நீர்
நம்பினோர்க்கடைக்கலம் நீர் -2
உந்தன் பிரச்சனம் எந்தன் வாஞ்சையே
உந்தன் பிரச்சனம் எந்தன் மறைவிடம்
உந்தன் பிரச்சனம் ஒன்று போதுமே-2
ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம்மோடு ஒரு நாள் மகிழ்ச்சியே -2
உம்மில்லத்தில் பேரின்பமே
என் இன்னல்கள் யாவும் நீங்கிடுதே - 2 .
ஆயிரம் மேன்மை எனக்கிருப்பினும்
உம் மேன்மைப்படுவதே பெருமையே
ஆயிரம் நாவுகள் போதாதையா
உம் புகழை நான் பாடிடவே.
மலைகள் உருகிடும்
எந்தன் இன்னல்கள் இனிதாகிடும்
பெலவீனங்கள் நீங்கிடும்
வாழ்க்கை புதிதாய் மாற்றிடும்
உந்தன் பிரசன்னம் ஒன்றே என் பெலனே
நான் உம்மில் என்றும் சார்ந்திடுவேன்
Details
- Numeric ID
- 4672
- Song ID
- arpanithean-unthan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0