Lyrics
அற்புதங்கள் செய்பவர் இன்னும் வாழ்கிறார்
அதிசயங்கள் செய்பவர்
நமக்குள் வாழ்கிறார் என்றும் வாழ்கிறார்
துதித்துப் பாடிடுவோம்
புகழ்ந்து நாம் போற்றிடுவோம்
கலங்காதே என் மகனே
சோர்ந்திடாதே என் மகளே-கன்மலையை
பிளந்து தண்ணீரைத் தந்தவர்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
நீ விசுவாசித்தாலே தேவ
மகிமையைக் கண்டிடலாம் - மாராவின்
தண்ணீரைத் தேனாக மாற்றினவர்
உன் வாழ்வை வளமாக்குவார்
நீ போகும் பாதையிலே
வனாந்தரம் வந்தாலும்
ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன்
நீர் ஊற்றை உனக்கருள்வார்
Details
- Numeric ID
- 4694
- Song ID
- arpudhangal-seibavar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0