Lyrics
நான் ஜெபிக்கும்போது வாக்குத்தத்தம் செய்திடும்
என் தேவன் அற்புதரே
அற்புதரே அதிசயரே
அகிலத்தை அரசாளும் மெய்தெய்வமே
என்றென்றும் துதிப்பேன்
இம்மட்டும் காத்தவரை
எந்நாளும் துதித்து ஆராதிப்பேன்
தேவரீர் உம் ஆசீர்வாதம்
எல்லையை பெரிதாக்கி மகிழச்செய்யும்
உமது கரமே என்னோடிருப்பதால்
தீங்கு அணுகாமல் காத்துக் கொள்ளுமே
தீமை செய்த எதிரி கண்முன்பே
நன்மைகள் யாவும் சூழ்ந்து கொண்டதே
வலதுகரத்தின் இரட்சிப்பை காண்பித்து
வல்லவர் நிழலில் களிகூருவேன்
ஜெபத்தை அலட்சியம் செய்யாமலே
செவிகள் சாய்த்து கேட்பவரே
எனது தேவைகள் யாவையும் அறிந்து
எனக்கு பதிலை தருபவரே
Details
- Numeric ID
- 684
- Song ID
- arputhare-athisaiyare-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0