Arumaiyura Nee அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
Lyrics
அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்
அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து வழிந்தோடும்.
திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து எனதாகும்
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் நான் மறைந்து பறந்தோடி
மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான
இன்பும் மலர் முக சந்தோஷ பண்பும் சுடரா
மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே
நிரந்து வளமை வரவே விளைந்த நிலையாக
உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து உனதடிமையாய்ப் பரிந்து எனையாளாய்
உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து
உதவு நதியாக வந்த பெருமானே
Details
- Numeric ID
- 7164
- Song ID
- arumaiyura-nee-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0