Athikaalaiyilumai அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
Lyrics
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே
இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே
போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா
எனக்கான ஈசனே வான ராசனே
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா
பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது தப்
பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது
விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது
நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே
புகழான நாதனே வேத போதனே
பூரணமாய் உனைப் போற்றுவேன் தினந் தினம் மெய்யே
Details
- Numeric ID
- 7194
- Song ID
- athikaalaiyilumai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0