Lyrics
அவர் கரம் அல்லவா
1. நேசம் காட்டி அழைத்த கரம்
நண்பன் போல அணைத்த கரம்
நாதியில்லை என்ற போது
தாயைப் போல சுமந்த கரம்
மூடி என்னைக் காத்தவர்
ஏற்ற நேரம் உயர்த்துவார்
ஜீவன் போன பின்புமே
ஜீவன் தந்து நடத்துவார்.
2. உடைந்த என்னை எடுத்த கரம்
எறிந்து விட மறுத்த கரம்
பயனில்லை என்ற போதும்
பாதுகாக்க துடித்த கரம்
மாறும் வரை காத்தவர்
மாணிக்கமாய் மாற்றுவார்
ஜீவன் போன பின்புமே ஜீவ கிரீடம் சூட்டுவார்
Details
- Numeric ID
- 4711
- Song ID
- avar-karam-allava-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0