Lyrics
தலைமுறை தாங்கும் அவர் கிருபை
தாங்கிடும் என்னை நடத்திடுமே
இயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும்
என்னை எழும்ப செய்பவர் உயர்த்துபவர்
என்னை என்றென்றும் வாழ வைப்பவர்
கர்த்தர் செய்வதை கண்கள் காணும்
அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும்
1.காற்றை என் கண்கள் காணலையே
மழையும் என் வாழ்க்கை பார்க்கலையே-2
வறண்டு போன என் வாழ்க்கையை
உந்தன் கிருபை கண்டதே
வாய்க்கால் ஒவ்வொன்றாய் நிரம்பிடுதே
உந்தன் தயவு பெரியதே-என்னை எழும்ப
1000 Yearsu HIS Graceu
தாங்கிடும் என்னை நடத்திடுமே
2.அழிக்க நினைக்கும் மனிதரின் முன்
வாழ வைக்கும் தெய்வம் அவர்
எதிர்த்து நிற்கும் எதிரியின் முன்
உயர்த்தி வைக்கும் தெய்வம் அவர்
தலைமுறை தலைமுறை அவர் இரக்கம்
என்னை சூழ்ந்துகொள்ளுமே
விலகி போகாமல் கடைசி வரை
என்னை வாழ வைக்குமே
Details
- Numeric ID
- 659
- Song ID
- avar-kirubai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1