Lyrics
அவர் நாமத்தினால் கேட்ட எல்லாமுமே
என்றும் எப்போதும் நடந்திடுமே
அவர் சித்தத்தினால் கேட்ட எல்லாமுமே
என்றும் தவறாமல் நடந்திடுமே
அவர் உண்மையுள்ளவரே
என்றும் மறப்பதில்லையே
1.எலியா கேட்ட விண்ணப்பம் கேட்டவர் இன்று
நம்மோடு இருக்கின்றாரே
அன்று வானம் திறந்ததுப் போல்
உந்தன் வாழ்வின் வாசல் திறந்திடுமே
அவர் வல்லமையுள்ளவரே
என்றும் மறப்பதில்லையே
2.அன்னாள் அழுது ஜெபித்த விண்ணப்பம் கேட்டவர்
நம்மோடு இருக்கின்றாரே
அன்று கண்ணீரைக் கண்டவர் பிள்ளையைக் கொடுத்தவர்
உனக்கும் கொடுத்திடுவார்
அன்று கண்ணீரைக் கண்டவர் உன்னையும் காண்கிறார்
கண்ணீரைத் துடைத்திடுவார்
அவர் கண்ணீரைக் கண்பவரே
என்றும் மறப்பதில்லையே
3.தானியேல் கேட்ட விண்ணப்பம் கேட்டவர்
இன்று நம்மோடு இருக்கின்றாரே
அன்று சிங்க கெபியினில் விடுத்தவர்
இன்று உன்னையும் விடுவிப்பாரே
அவர் விடுதலை நாயகனே
நம்மை விடுவிக்க வல்லவரே.
Details
- Numeric ID
- 1199
- Song ID
- avar-namathinaal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0