Aaviyai Melaipolae Ootrum ஆவியை மழைபோலே யூற்றும் பல
ஆவியை மழைபோலே யூற்றும் பல
Lyrics
ஆவியை மழைபோலே யூற்றும் -பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
1.அன்பினால் ஜீவனை விட்டீர்,-ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும்.
2.சிதறுண்டலைகிற ஆட்டைப்-பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
3.காத்திருந்த பல பேரும்-மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்.
4.தோத்திரக் கீதங்கள் பாடி-எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். – ஆவியை
Details
- Numeric ID
- 7092
- Song ID
- aviyai-malaipole-yurrum-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0