Lyrics
அழகான படைப்பே
அட அமுதே உனக்கென்ன கோவமா
பொன் முகத்தின் சிரிப்பே
உன் முகத்தில் இது என்ன சோகமா
சத்தியத்தை நீ புரிஞ்சா
அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு
அதில் சொல்லும்படி நீ நடந்தா
உனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு
மலரே உன் கண்ணீரை துட
சிறகே உன் சோகத்தை மற
படைப்பே உன்னை படைத்தவரை பார்த்து
உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு
சோகத்தை மறந்துட்டு
இயேசுவை நீ பாடு
வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம்
அவரு தீர்ப்பாரு
இங்கே நீயும் நானும் நல்லாருக்க
அவரு வந்தாரு
ஒரு வார்த்தை ஒன்னு போதும் உனக்கு
எல்லாம் செய்வாரு
இதை நீயும் நானும் நம்புனாலே
வாழ்க்கையே ஜோரு
ஓடு நில்லாம
சிலுவையில உனக்காய் எல்லாம்
செஞ்சி முடிச்சாரு
பாடு சலிக்காம
பரம தகப்பன் உன்னை இன்று
கட்டி அணைப்பாரு
Details
- Numeric ID
- 712
- Song ID
- azhagaana-padaipe-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1