Lyrics
அழைக்கடலில் மீன்கள் பலவுண்டு
அதையும் பிடித்திட மீனவர் பலருண்டு
அழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டு
அதற்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு
யாரை அனுப்புவேன்
யார் என் வேலையாய் போவார் ஓ ..ஓ …
1. அலையை போலவே அலைந்து திரிந்திடும்
அமைதியை இழந்து அதிபதி அடைந்திட்ட
அநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டு
அநேகம் பேருண்டு அணைத்திட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு
2. சிலுவை அன்பினை சற்று அறியாமல்
சிந்திய இரத்தத்தின் மகத்துவம் உணராமல்
ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டு
ஜீவனை கொடுத்தவர் இயேசுவே தானுண்டு
ஆண்டவர் இயேசுவை அறிவிக்க யாருண்டு
ஆண்டவர் தேடிடும் மனிதன் நீ உண்டு
Details
- Numeric ID
- 4562
- Song ID
- azhakadalil-meengal-palavundu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0