Lyrics
பாக்கியர் இன்னார்-என்றிறைவன்
பண்புடன் சொன்னார்.
ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே
அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில்
ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர்
பாவிகள் தாமென்று பயந்து நடப்போர்
தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர்.
துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர்
விக்கினமின்றி எந் தேவன் அருளினால்
மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர்.
சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர்,
வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர்
மேதினி வாழ்விலும் விண்ணிலும் பாக்கியர்.
நீதியின் பேரில்-பசி தாகம்-நித்தம் கொள்வோரில்
போத மெய்ப் புத்தியும் பூரண பத்தியும்,
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர்.
இரக்க முடையோர்,-பிறர்மீது-உருக்கமுடையோர்,
நெருக்கப்படுவோர்க்கு நேயமுற்றுதவுவோர்
காதலன் ஆவி கடாட்சிப்பர் பாக்கியர்.
சுத்தநெஞ்சத்தார்,-தேவனருன்-சுகிர்த ஜென்மத்தார்
பத்தியில் வர்த்தித்து நித்தமும் தேவனின்
பரிசுத்த சமுகத்தைத் தரிசிக்கும் பாக்கியர்.
சமாதானத்தை-நடப்பித்துச்-சல்யம் வாதத்தைத்
தமதுரை நடக்கையால் தள்ளி ஒழுகுவோர்
நமதேகன் சேயர்கள் என்னும் மெய்ப்பாக்கியர்.
நற்செய்கை யிட்டுப்-பகைஞரால்-நஷ்டங்கள் பட்டுத்
துர்செய்கை நீங்கியே துன்பப் படுவோர்
சுகலோகம் சேர்ந்தென்றும் முகியாத பாக்கியர்.
Details
- Numeric ID
- 5241
- Song ID
- bakkiyar-innar-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1